search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செல்வன்
    X
    செல்வன்

    பங்களாப்புதூர் அருகே பஸ்- மோட்டார் சைக்கிள் மோதல்: வன ஊழியர் பலி

    பங்களாப்புதூர் அருகே பஸ், மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் வன ஊழியர் பலியானார்.
    டி.என்.பாளையம்:

    பங்களாப்புதூர் அருகே உள்ள டி.என்.பாளையத்தை சேர்ந்தவர் செல்வன் (வயது 54). இவர் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் சுற்றுச்சூழல் வனச்சரகத்தில் வனவராக பணியாற்றி வந்தார்.

    நேற்று முன்தினம் ஈரோட்டில் துறை சார்ந்த தேர்வு எழுதி விட்டு இரவு கோபியில் இருந்து டி.என்.பாளையம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். நஞ்சைபுளியம்பட்டி பவானி ஆற்றுப்பாலத்தில் வந்தபோது எதிரே வந்த அரசு பஸ்சும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன.

    இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து செல்வன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

    விபத்தை கண்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி செல்வன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×