என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பங்களாப்புதூர் அருகே பஸ்- மோட்டார் சைக்கிள் மோதல்: வன ஊழியர் பலி
Byமாலை மலர்20 Feb 2021 1:54 AM GMT (Updated: 20 Feb 2021 1:54 AM GMT)
பங்களாப்புதூர் அருகே பஸ், மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் வன ஊழியர் பலியானார்.
டி.என்.பாளையம்:
பங்களாப்புதூர் அருகே உள்ள டி.என்.பாளையத்தை சேர்ந்தவர் செல்வன் (வயது 54). இவர் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் சுற்றுச்சூழல் வனச்சரகத்தில் வனவராக பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் ஈரோட்டில் துறை சார்ந்த தேர்வு எழுதி விட்டு இரவு கோபியில் இருந்து டி.என்.பாளையம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். நஞ்சைபுளியம்பட்டி பவானி ஆற்றுப்பாலத்தில் வந்தபோது எதிரே வந்த அரசு பஸ்சும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து செல்வன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
விபத்தை கண்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி செல்வன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X