search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bus motorcycle accident"

    கிருமாம்பாக்கத்தில் இன்று காலை மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதில் தம்பி பலியானார். அண்ணன் படுகாயம் அடைந்தார்.

    பாகூர்:

    கிருமாம்பாக்கம் ஏரிக்கரை வீதியை சேர்ந்தவர் பத்மநாபன் தொழில் அதிபர். இவரது மனைவி பத்மாவதி. இவர் முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவர் ஆவார். இவர்களது மகன்கள் விக்னேஷ் (19), பிரவீன்குமார் (16).

    விக்னேஷ் தாகூர் அரசு கல்லூரியில் 2-ம் ஆண்டும், பிரவீன்குமார் புதுவையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1-ம் படித்து வந்தனர்.

    இன்று காலை புத்தகம் வாங்குவதற்காக விக்னேசும், பிரவீன்குமாரும் புதுவைக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வந்தனர்.

    விக்னேஷ்மோட்டார் சைக்கிளை ஓட்ட, பிரவீன்குமார் பின்னால் அமர்ந்து வந்தார். வீட்டில் இருந்து புறப்பட்ட சிறிது தூரத்தில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி அருகே வந்த போது புதுவையில் இருந்து கடலூர் நோக்கி சென்ற தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கிவீசப்பட்ட விக்னேசும், பிரவீன்குமாரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே பிரவீன்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து விக்னேஷ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேட்ரிக், ஏட்டு புவனேஷ் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த விபத்து சம்பவம் காரணமாக கிருமாம்பாக்கம் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×