என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடலூர் அருகே சாராயம் கடத்திய 3 பேர் கைது
Byமாலை மலர்19 Feb 2021 12:47 PM GMT (Updated: 19 Feb 2021 12:47 PM GMT)
கடலூர் அருகே சாராயம் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 30 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
கடலூர்:
கடலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் தாரகேஸ்வரி மற்றும் போலீசார் பெரியகங்கணாங்குப்பம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை மறித்து சோதனையிட்டனர். அதில் சாராயம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சாராயம் கடத்திய கடலூர் புதுப்பாளையத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியை (வயது 50) கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 30 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் சாராயம் கடத்தியதாக புதுப்பாளையத்தை சேர்ந்த சரவணன் (48), பாஸ்கர் (42) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 65 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X