என் மலர்
செய்திகள்

கைது
மத்தூர் பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
மத்தூர் பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:
மத்தூரில் கிருஷ்ணகிரி சாலையில் போலீசார் ரோந்து சென்றனர். அந்த பகுதியில் 2 பேர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் ஒருவர் ஓடி விட்டார். மற்றொருவர் பிடிபட்டார். விசாரணையில் அவர் போச்சம்பள்ளி அருகே உள்ள குள்ளனூரை சேர்ந்த துரை (வயது 46) என தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 10 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.600-ஐ பறிமுதல் செய்தனர்.
இதே போல மத்தூர்-ஊத்தங்கரை சாலையில் லாட்டரி சீட்டு விற்றதாக கீழ்வீதி பகுதியை சேர்ந்த சபரீசன் (37) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 7 லாட்டரி சீட்டுகள், ரூ.600-ம் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் மத்தூர் போலீசார் சோனரஹள்ளி ஏரிபகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய மத்தூர் கவுண்டனூர் கூட்டு ரோடு பூங்காவனம் (55), போயர்கொட்டாய் மாது (60) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.300 பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story






