என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிறுமியை கடத்தி திருமணம் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
Byமாலை மலர்18 Feb 2021 12:42 PM GMT (Updated: 18 Feb 2021 12:42 PM GMT)
ஸ்ரீபெரும்புதூர் அருகே சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த செங்காடு கிராமத்தை சேர்ந்தவர் சர்தார். இவரது மகன் விக்னேஷ் (வயது 20). இவர் ஸ்ரீபெரும்புதூர் பஜார் பகுதியில் இருசக்கர வாகன மெக்கானிக்காக இருந்து வருகிறார். இவர் செங்காடு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்த நிலையில் அவர் அந்த பெண்ணை ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்ததாக தெரிகிறது. கடந்த 14-ந்தேதி சிறுமியை காணவில்லை என்று அவரது தாய் ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் விக்னேஷ் அந்த சிறுமியை கடத்தி சென்று திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கு ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் போலீசுக்கு மாற்றப்பட்டது. இன்ஸ்பெக்டர் பரிபூரணம் திருவள்ளூர் பகுதியில் அந்த சிறுமியுடன் பதுங்கி இருந்த விக்னேசை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுமியை மீட்டு மருத்துவ பரிசோதனை முடித்து அவரது தாயிடம் ஒப்படைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X