என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆப்பக்கூடல் அருகே பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்17 Feb 2021 6:35 AM GMT (Updated: 17 Feb 2021 6:35 AM GMT)
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே வீட்டில் தனியாக இருந்த பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஆப்பக்கூடல்:
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகேயுள்ள எட்டிக்கொட்டை பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. சுமை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி சுப்பாத்தாள். இவர்களுக்கு கோதைநாயகி (17), ஹரிணிஸ்ரீ (13) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.
மூத்த மகள் கோதை நாயகி ஆப்பக்கூடல் புதுப்பாளையம் அரசு பள்ளியில் 11-ம் வகுப்பும், 2-வது மகள் ஹரிணிஸ்ரீ 7-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
நேற்று பெற்றோர் வெளியில் சென்று விட்டனர். ஹரணிஸ்ரீ ஆடு மேய்க்க வெளியே சென்று விட்டார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த கோதைநாயகி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வெளியில் சென்ற பெற்றோர் மாலை வீடு திரும்பினர். அப்போது மாணவி கோதைநாயகி தூக்கில் பிணமாக தொங்கு வதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவி கோதை நாயகி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகேயுள்ள எட்டிக்கொட்டை பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. சுமை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி சுப்பாத்தாள். இவர்களுக்கு கோதைநாயகி (17), ஹரிணிஸ்ரீ (13) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.
மூத்த மகள் கோதை நாயகி ஆப்பக்கூடல் புதுப்பாளையம் அரசு பள்ளியில் 11-ம் வகுப்பும், 2-வது மகள் ஹரிணிஸ்ரீ 7-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
நேற்று பெற்றோர் வெளியில் சென்று விட்டனர். ஹரணிஸ்ரீ ஆடு மேய்க்க வெளியே சென்று விட்டார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த கோதைநாயகி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வெளியில் சென்ற பெற்றோர் மாலை வீடு திரும்பினர். அப்போது மாணவி கோதைநாயகி தூக்கில் பிணமாக தொங்கு வதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவி கோதை நாயகி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X