search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் காந்தி
    X
    ராகுல் காந்தி

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ராகுல் காந்தி இன்று புதுச்சேரிக்கு வருகிறார்

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று புதுச்சேரி வருகிறார்.
    புதுச்சேரி:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி இன்று மதியம் புதுச்சேரி வருகிறார்.

    புதுவை விமான நிலையத்தில் அவருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதன்பின், சோலைநகருக்கு சென்று அங்கு மதியம் 1.30 மணி வரை மீனவப் பெண்களை சந்தித்துப் பேசுகிறார். அதன்பின் பாரதிதாசன் கல்லூரி மாணவிகளைச் சந்தித்து கலந்துரையாடுகிறார்.
     
    அதைத்தொடர்ந்து, பிற்பகல் 3 மணி அளவில் ரோடியர் மில் திடலில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார். அதன்பின் சென்னை வருகிறார்.

    ராகுல் காந்தியின் நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை முதலமைச்சர் நாராயணசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

    புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் 4 எம்.எல்.ஏ.க்கள் விலகி பரபரப்பு ஏற்பட்டுள்ள  நிலையில் ,காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் வருகை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×