search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கலசப்பாக்கம் அருகே இளம்பெண்ணை நிர்வாணமாக்கி கற்பழித்து கொலை - தனிப்படை விசாரணை

    கலசப்பாக்கம் அருகே இளம்பெண்ணை கற்பழித்து கொலை செய்த மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த சொரகொளத்தூர் செல்லும் வழியில் ஒரு டாஸ்மாக் கடை எதிரே காப்புக்காடு பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் கொலை செய்யப்பட்டு நிர்வாணமாக கிடந்தார்.

    அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என்றும் இதனால் ஏற்பட்ட தகராறால் அவரை மர்மநபர் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    கொலை செய்யப்படுவதற்கு முன்பாக பெண்ணுடன் உல்லாசத்தில் ஈடுபட்ட மர்மநபர் காமவெறியால் பெண்ணின் உடல் பாகங்களை பல்லால் கடித்துள்ளார். அதற்கான அடையாளங்கள் பெண்ணின் உடலில் பல இடத்தில் இருந்தன.

    திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். திருவண்ணாமலையில் இருந்து மோப்பநாய் ‘மியா’ மற்றும் வேலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    மோப்பநாய் பெண்ணின் பிணத்தை மோப்பம் பிடித்தவாறு சிறிது தூரம் ஓடியது. கைரேகை நிபுணர்கள் கைரேகை மற்றும் தடயங்களை பதிவு செய்தனர். மேலும் பிணம் கிடந்த இடத்தில் பெண்ணின் ஜீன்ஸ் பேண்ட் மற்றும் மேலாடை டாப்ஸ் ஆகியவை கிடந்தன. அதை, போலீசார் கைப்பற்றி விசாரணைக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.

    இந்த கொலை சம்பந்தமாக 2 தனிப்படை அமைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    டாஸ்மாக் கடைக்கு நேர் எதிரே காப்புக்காட்டில் பெண் கொலை செய்யப்பட்டு கிடந்ததால் மதுப்பிரியர்கள் யாரேனும் குடித்துவிட்டு, போதையில் பெண்ணை கற்பழித்துக் கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டாஸ்மாக் கடைக்கு வந்து சென்றவர்கள் விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். விரைவில் துப்பு துலங்கும் என போலீசார் தெரிவித்தனர். 

    Next Story
    ×