என் மலர்
செய்திகள்

தற்கொலை
வெவ்வேறு சம்பவங்களில் வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை
வெவ்வேறு சம்பவங்களில் வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:
சிவகாசி சித்துராஜபுரம் கிரகத்தாயம்மாள் நகரை சேர்ந்தவர் கனகவேல்ராஜன் (வயது 41). இவர் வேலைக்கு எதுவும் செல்லாமல் இருந்துள்ளார். இதனால் இவர் குடும்பத்தை விட்டு பிரிந்து தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது அண்ணன் கணேசமூர்த்தி சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதே போல் சிவகாசி விஸ்வநத்தம் பகுதியை சேர்ந்த சேதுராமன் மகன் நாகராஜன் (27) என்பவர் ஓட்டல் மேனேஜ் மெண்ட் படித்துவிட்டு வெளிநாட்டில் 2 வருடம் வேலை செய்து விட்டு சிவகாசி திரும்பினார். பின்னர் மீண்டும் துபாய் சென்றார். ஆனால் அங்கு அவருக்கு வேலை கிடைக்க வில்லை. இதனால் அவர் கடந்த 20 நாட்களுக்கு முன்னர் சிவகாசி திரும்பினார். இந்த நிலையில் வேலை கிடைக்காத விரக்தியில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத போது மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தாய் இந்திரா கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






