என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈரோட்டில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
Byமாலை மலர்13 Feb 2021 12:44 PM GMT (Updated: 13 Feb 2021 12:44 PM GMT)
ஈரோட்டில் மின்விசிறியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பூம்புகார் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 22). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி மஞ்சுளா (20). செந்தில்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் செந்தில்குமார் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து, மனைவி மற்றும் மாமியாரை வெளியே அனுப்பி விட்டு உள்புறமாக பூட்டிக்கொண்டார். வெகுநேரம் ஆகியும் அவர் கதவை திறக்காததால் அவருடைய மனைவி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது செந்தில்குமார் மின்விசிறியில் தூக்குப்போட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார்.
உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே செந்தில்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பூம்புகார் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 22). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி மஞ்சுளா (20). செந்தில்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் செந்தில்குமார் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து, மனைவி மற்றும் மாமியாரை வெளியே அனுப்பி விட்டு உள்புறமாக பூட்டிக்கொண்டார். வெகுநேரம் ஆகியும் அவர் கதவை திறக்காததால் அவருடைய மனைவி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது செந்தில்குமார் மின்விசிறியில் தூக்குப்போட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார்.
உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே செந்தில்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X