என் மலர்
செய்திகள்

ஊட்டி லவ்டேல் பகுதியில் உறைபனி காரணமாக தேயிலை செடிகள் கருகி இருப்பதை காணலாம்
ஊட்டியில் உறைபனியால் தேயிலை செடிகள் கருகின- விவசாயிகள் கவலை
ஊட்டியில் உறைபனியால் தேயிலை செடிகள் கருகின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
ஊட்டி:
பொதுவாக கொழுந்து மற்றும் நல்ல இலைகளை விவசாயிகள் பறித்து தொழிற்சாலைகளுக்கு வினியோகித்து வருகின்றனர். தற்போது இலைகள் கருகி வருவதால், தரமான பச்சை தேயிலை குறைவாக உள்ளது. தரம் இல்லாத இலைகளை வழங்கினால் விலை குறைவாக கிடைக்கிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். மேலும் வருமானமின்றி பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
எனினும் உறைபனியால் கருகாமல் இருக்க தேயிலை செடிகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பகல், இரவு நேரங்களில் தேயிலை செடிகள் மீது மற்ற செடிகளை போட்டு மூடி முன்னேற்பாடுகளை செய்கிறார்கள்.
இதன் மூலம் நிழல் கிடைப்பதாலும், செடிகள் பனி விழாததாலும் அவை கருதுவது தவிர்க்கப்படுகிறது. சிலர் காலை, மாலை நேரங்களில் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். அதிகாலையில் கேரட், பீட்ரூட், பூண்டு போன்ற காய்கறி பயிர்கள் மீது உறைபனி படர்ந்து கிடக்கிறது. வெயில் வந்த பின்னர் உறைபனி கரைந்து விடுகிறது.
பனி காரணமாக பயிர்கள் கருகும் அபாயம் உள்ளது. இதை தடுக்க விவசாயிகள் ஸ்பிரிங்ளர் மூலம் தண்ணீர் பாய்ச்சும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஊட்டி நகரில் நேற்று அதிகபட்ச வெப்பநிலை 20.4 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 2.1 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவானது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உறைபனி தாக்கம் தொடர்கிறது. நாளுக்கு நாள் உறைபனி அதிகரித்து வருவதால் புல்வெளிகள், வனப்பகுதிகள் வேகமாக கருகி வருகின்றன. குறிப்பாக ஊட்டி, மஞ்சூர் பகுதிகளில் தேயிலை செடிகள் கருக தொடங்கி உள்ளது.
தொடர் உறைபனி காரணமாக லவ்டேல், வேலிவியூ, கேத்தி பாலாடா, சோலூர் உள்ளிட்ட பகுதிகளில் தேயிலை தோட்டங்கள் பசுமையை இழந்து வருகிறது. பச்சை, பசேல் என காட்சி அளித்த அவை நிறம் மாறி கருகி வருகின்றன. இந்த ஆண்டு உறைபனி காலதாமதமாக தொடங்கினாலும், அதன் தாக்கம் அதிகரித்து உள்ளது. இதனால் பச்சை தேயிலை மகசூல் வெகுவாக குறைந்து இருக்கிறது.
பொதுவாக கொழுந்து மற்றும் நல்ல இலைகளை விவசாயிகள் பறித்து தொழிற்சாலைகளுக்கு வினியோகித்து வருகின்றனர். தற்போது இலைகள் கருகி வருவதால், தரமான பச்சை தேயிலை குறைவாக உள்ளது. தரம் இல்லாத இலைகளை வழங்கினால் விலை குறைவாக கிடைக்கிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். மேலும் வருமானமின்றி பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
எனினும் உறைபனியால் கருகாமல் இருக்க தேயிலை செடிகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பகல், இரவு நேரங்களில் தேயிலை செடிகள் மீது மற்ற செடிகளை போட்டு மூடி முன்னேற்பாடுகளை செய்கிறார்கள்.
இதன் மூலம் நிழல் கிடைப்பதாலும், செடிகள் பனி விழாததாலும் அவை கருதுவது தவிர்க்கப்படுகிறது. சிலர் காலை, மாலை நேரங்களில் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். அதிகாலையில் கேரட், பீட்ரூட், பூண்டு போன்ற காய்கறி பயிர்கள் மீது உறைபனி படர்ந்து கிடக்கிறது. வெயில் வந்த பின்னர் உறைபனி கரைந்து விடுகிறது.
பனி காரணமாக பயிர்கள் கருகும் அபாயம் உள்ளது. இதை தடுக்க விவசாயிகள் ஸ்பிரிங்ளர் மூலம் தண்ணீர் பாய்ச்சும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஊட்டி நகரில் நேற்று அதிகபட்ச வெப்பநிலை 20.4 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 2.1 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவானது.
Next Story






