search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    நீலகிரி-கேரள எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் மீண்டும் கொரோனா பரிசோதனை

    நீலகிரி-கேரள எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காய்ச்சல் உள்ளதா? என்று தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை செய்யப்படுகிறது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தினமும் 10-க்கும் கீழ் குறைந்து வருகிறது. தொற்று பாதித்தவர்களில் பூரண குணமடைந்து வீடு திரும்புவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. கொரோனா பாதிப்பு குறைந்ததால் மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் கொரோனா பரிசோதனை செய்வது நிறுத்தப்பட்டது. மேலும் முன்னதாக பிற இடங்களில் தினமும் 2,000 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. தொற்று கட்டுக்குள் வந்ததால் தினமும் ஆயிரம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே கேரளா மாநிலம் வயநாட்டில் கொரோனா பரவி வருகிறது. இதனால் எல்லையில் இருந்து நீலகிரிக்குள் வரும் வாகனங்கள் நாடுகாணி, தாளூர் ஆகிய 2 சோதனை சாவடிகளில் நிறுத்தப்படுகிறது. மேலும் அங்கிருந்து வருபவர்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காய்ச்சல் உள்ளதா? என்று தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை செய்யப்படுகிறது. நீலகிரியில் இதுவரை 3 லட்சத்து 24 ஆயிரத்து 890 பேரிடம் இருந்து மாதிரி சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×