என் மலர்
செய்திகள்

அறந்தாங்கி அருகே சிறுமிகளிடம் பாலியல் உறவு கொள்ள முயன்ற 9-ம் வகுப்பு மாணவன் கைது
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மணிவிளான் 5 ஆம் வீதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுவன் மணிவிளான் 1-ம் வீதியை சேர்ந்த 5-ம் வகுப்பு படிக்கும் 11 வயது மாணவி மற்றும் 7 ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவி ஆகியோருடன் விளையாடுவது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த 6 மாத காலமாக அப்பகுதியில் உள்ள ஒரு கொட்டகையில் வைத்து அந்த சிறுவன் மாணவிகள் இருவரையும் அழைத்து சென்று தனித்தனியாக பாலியல் உறவு கொள்ள முயன்றுள்ளார்.
மேலும் இதை வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது எனவும் மிரட்டியுள்ளார். இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி அந்த சிறுமிகளுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. மாணவிகளின் பெற்றோர் இருவரையும் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுமிகளிடம் நடத்திய விசாரணையில் சிறுவன் தங்களிடம் நடந்து கொண்டதை கூறினர்.
இதைத்தொடர்ந்து அறந்தாங்கி அனைத்து மகளிர் போலீசார் சிறுமிகளை பாலியல் உறவு கொள்ள முயன்ற சிறுவன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சிறுவன் புதுக்கோட்டை ஜே.எம்-1 கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். அவரை வரும் 25-ந்தேதி வரை திருச்சி இளஞ்சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சிறுவன் திருச்சியில் உள்ள இளஞ்சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அறந்தாங்கி பகு தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






