search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    கடலூர் மாவட்டத்தில் 6 பேருக்கு கொரோனா

    கடலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 25 ஆயிரத்து 11 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், புதிதாக 6 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர்களில் சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த்தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த என்.எல்.சி., கடலூரை சேர்ந்த 2 பேர், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 4 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

    நேற்று முன்தினம் வரை 24 ஆயிரத்து 657 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்ற நிலையில், நேற்று 4 பேர் குணமடைந்து சென்றனர். கொரோனா பாதித்த 43 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனைகளிலும், 26 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 406 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.
    Next Story
    ×