என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிருஷ்ணகிரியில் வேளாண் சட்டங்களை திரும்பபெறக்கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்11 Feb 2021 11:18 AM GMT (Updated: 11 Feb 2021 11:18 AM GMT)
கிருஷ்ணகிரியில் வேளாண் சட்டங்களை திரும்பபெறக்கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று ராயக்கோட்டை சாலை காமராஜர் நகரில் உள்ள காமராஜர் சிலை எதிரில் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மேற்கு வட்டார தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் டாக்டர் தகி, மாவட்ட பொது செயலாளர் அப்சல், வட்டார செயலாளர் வெங்கடேசன், காசிநாதன், அண்ணாமலை, சக்கரவர்த்தி, லண்டன் கோபால், முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் நகர காங்கிரஸ் தலைவர் ரகமத்துல்லா வரவேற்று பேசினார். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நிர்வாகிகள் ரங்கசாமி, ஏழுமலை, அஜிஸ்வுல்லா, அக்பர், ஆஜித் பாஷா, முனியம்மாள், கோவிந்தசாமி, இருதயம் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார துணை தலைவர் அமாசி நன்றி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X