என் மலர்
செய்திகள்

கபடி
கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அழகியமனவாளன் கிராமத்தில் எதிர்நீச்சல் கபடி கழகம் மற்றும் அமெச்சூர் கபடி கழகம் இணைந்து நடத்திய கபடி போட்டி நடைபெற்றது.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அழகியமனவாளன் கிராமத்தில் எதிர்நீச்சல் கபடி கழகம் மற்றும் அமெச்சூர் கபடி கழகம் இணைந்து நடத்திய கபடி போட்டி நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெற்ற இந்த கபடி போட்டியின் தொடக்க நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். போட்டியின் முடிவில் வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு பரிசுத்தொகை, கோப்பைகளை அவர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் திருமானூர் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் வடிவழகன், மேற்கு ஒன்றிய செயலாளர் குமரவேல், மாவட்ட தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சாமிநாதன், ஒன்றிய துணை செயலாளர் சரவணன், விழுப்பனங்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் கருப்பையா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் அரியலூர், பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மொத்தம் 37 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இதில் இறுதிப்போட்டியில் தஞ்சாவூர் கபடி அணி வெற்றி பெற்றது. அந்த அணிக்கு கோப்பை மற்றும் ரூ.12 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது. 2-வது இடத்தை சோழபுரம் கபடி அணியும், 3-வது இடத்தை பட்டுக்கோட்டை கபடி அணியும், 4-வது இடத்தை அழகியமனவாளன் கபடி அணியும் பிடித்தன. அந்த அணிகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.
Next Story






