என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விருதுநகர் மாவட்டத்தில் 4,652 பேருக்கு கொரோனா தடுப்பூசி
Byமாலை மலர்10 Feb 2021 10:22 AM GMT (Updated: 10 Feb 2021 10:22 AM GMT)
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று வரை 4,652 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த மாதம் 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 10 ஆயிரம் பேருக்கு முதல் கட்டமாக தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.
நேற்று வரை மாவட்டம் முழுவதும் 4,652 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. எதிர்பார்த்த வேகம் இல்லாத நிலையில் தடுப்பூசி போட தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16,602 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் 4 லட்சத்து 2,891 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 16,594 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. 16,334 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 29 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை.
மாவட்ட சுகாதாரத் துறையினர் மருத்துவ பரிசோதனை எண்ணிக்கை மற்றும் சோதனை முடிவுகள் குறித்த விவரங்களை முழுமையாக தெரிவிக்காத நிலையே தொடர்கிறது.
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த மாதம் 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 10 ஆயிரம் பேருக்கு முதல் கட்டமாக தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.
நேற்று வரை மாவட்டம் முழுவதும் 4,652 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. எதிர்பார்த்த வேகம் இல்லாத நிலையில் தடுப்பூசி போட தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16,602 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் 4 லட்சத்து 2,891 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 16,594 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. 16,334 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 29 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை.
மாவட்ட சுகாதாரத் துறையினர் மருத்துவ பரிசோதனை எண்ணிக்கை மற்றும் சோதனை முடிவுகள் குறித்த விவரங்களை முழுமையாக தெரிவிக்காத நிலையே தொடர்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X