search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு கொண்டு வரப்பட்டு இருந்த துவரை மூட்டைகள்
    X
    அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு கொண்டு வரப்பட்டு இருந்த துவரை மூட்டைகள்

    அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.56¼ லட்சத்துக்கு துவரை ஏலம்

    அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.56¼ லட்சத்துக்கு துவரை ஏலம் போனது.
    அந்தியூர்:

    அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் துவரை ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு அந்தியூர், ஒலகடம், வெள்ளித்திருப்பூர், சென்னம்பட்டி, அத்தாணி, பர்கூர், ஆப்பக்கூடல், வட்டக்காடு, அம்மாபேட்டை, பட்லூர், செம்புளிச்சாம்பாளையம், பச்சாம்பாளையம், காட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் 1,163 மூட்டைகளில் துவரையை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

    இது குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.5 ஆயிரத்து 481-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.6 ஆயிரத்து 550-க்கும் விற்பனை ஆனது. துவரை மொத்தம் ரூ.56 லட்சத்து 34 ஆயிரத்து 982-க்கு ஏலம் போனது.

    ஈரோடு, பெருந்துறை, திருப்பூர், தர்மபுரி, நெல்லை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் இங்கு வந்து ஏலத்தில் கலந்து கொண்டு போட்டி போட்டு துவரையை ஏலம் எடுத்து சென்றனர்.
    Next Story
    ×