என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சந்தவாசல் அருகே மின் ஊழியரை தாக்கிய மனைவி கைது
Byமாலை மலர்9 Feb 2021 1:02 PM GMT (Updated: 9 Feb 2021 1:02 PM GMT)
சந்தவாசல் அருகே குடும்ப தகராறில் மின் ஊழியரை தாக்கிய மனைவியை போலீசார் கைது செய்தனர்.
கண்ணமங்கலம்:
சந்தவாசல் அருகே உள்ள கொல்லமேடு பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 50). ஆரணி அடுத்த தச்சூர் மின் வாரிய அலுவலகத்தில் லைன் இன்ஸ்பெக்டராக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி வெள்ளி (46). கணவன்-மனைவி இருவகுக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
கடந்த 7-ந் தேதி இரவு அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் தாமோதரன் தூங்கவிட்டார். அப்போது தாமோதரனை, அவரது மனைவி வெள்ளி, கம்பால் முகத்தில் தாக்கியுள்ளார். அவருடைய சத்தம் கேட்டு ஒடிவந்த மருமகள் மகாலட்சுமி, மகன் பிரபாகரன் ஆகிய இருவரும் ரத்த காயத்துடன் கிடந்த தாமோதரனை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக மகாலட்சுமி சந்தவாசல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குப்பதிவு செய்து, தாமோதரனின் மனைவி வெள்ளியை கைது செய்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X