என் மலர்
செய்திகள்

விபத்து பலி
ராயக்கோட்டை அருகே லாரிகள் மோதல்- டிரைவர் பலி
ராயக்கோட்டை அருகே விபத்தில் டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள பெரியகோடி பகுதியை சேர்ந்தவர் முத்துகுமார் (வயது 21). லாரி டிரைவர். சம்பவத்தன்று இவர் காடு செட்டிப்பட்டியில் இருந்து டிப்பர் லாரியை ஓட்டிக்கொண்டு ராயக்கோட்டை நோக்கி சென்றார். அப்போது எதிரே வந்த லாரியும், டிப்பர் லாரியும் காடுசெட்டிப்பட்டி பகுதியில் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் முத்துகுமார் மற்றும் மற்றொரு லாரி டிரைவர் சந்தோஷ் (27) ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் முத்துகுமார் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முத்துகுமார் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






