என் மலர்
செய்திகள்

கோப்பு படம்.
கடலூர் மாவட்டத்தில் 14 பேருக்கு கொரோனா உறுதி
கடலூர் மாவட்டத்தில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில் புதிதாக 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 24 ஆயிரத்து 985 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில் புதிதாக 14 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.
இவர்களில் அறுவை சிகிச்சைக்கு முன்பு உள்ள விருத்தாசலம் நோயாளி, சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த்தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருந்த 4 பேர், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 9 பேருக்கும் பாதிப்பு உறுதியானது.
நேற்று முன்தினம் வரை 24 ஆயிரத்து 636 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்ற நிலையில், நேற்று 4 பேர் குணமடைந்து சென்றனர். கொரோனா பாதித்த 48 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனையிலும், 24 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
470 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 24 ஆயிரத்து 985 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில் புதிதாக 14 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.
இவர்களில் அறுவை சிகிச்சைக்கு முன்பு உள்ள விருத்தாசலம் நோயாளி, சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த்தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருந்த 4 பேர், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 9 பேருக்கும் பாதிப்பு உறுதியானது.
நேற்று முன்தினம் வரை 24 ஆயிரத்து 636 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்ற நிலையில், நேற்று 4 பேர் குணமடைந்து சென்றனர். கொரோனா பாதித்த 48 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனையிலும், 24 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
470 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.
Next Story






