என் மலர்
செய்திகள்

சிதம்பரம் அருகே படகு கவிழ்ந்து 2 மீனவர்கள் பலி
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். திட்டு பகுதியைச் சேர்ந்த குணசேகரன் (வயது 60), வீரத்தமிழன் (50), தமிழன் (52), சிங்கார குப்பத்தை சேர்ந்த அப்பு (40). ஆகிய 4 பேரும் குணசேகரனுக்கு சொந்தமான படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
அவர்கள் கடலில் மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். சிதம்பரம் பகுதியில் உள்ள வெள்ளாற்று முகத்துவாரம் பகுதியில் படகு வந்த போது அந்த பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் படகு நிலைதடுமாறி கவிழ்ந்தது.
இதில் படகில் இருந்த 4 பேரும் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர். அப்பு, குணசேகரன் ஆகிய 2 பேரும் நீந்தி கரை சேர்ந்தனர். வீரத்தமிழன், தமிழன் ஆகிய 2 பேரும் கரை திரும்பவில்லை.
இதையடுத்து நடந்த சம்பவத்தை அங்கிருந்த கடலோர காவல் துறையினரிடம் கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர். அந்த பகுதியில் உள்ள மீனவர்கள் மற்றும் கடலோர காவல்படையினர் மாயமான தமிழன், வீரத் தமிழன் ஆகிய 2 பேரையும் படகுகள் மூலம் தேடும் பணி யில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் வடக்கு முடசல்ஓடை பகுதியில் தமிழன், வீரத்தமிழன் ஆகிய 2 பேரின் உடல்களும் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித் தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கரை ஒதுங்கிய 2 மீனவர்களின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.






