search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது செய்யப்பட்ட 3 பேர் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட சாராய மூட்டைகள், மோட்டார் சைக்கிள்களை படத்தில் காணலாம்.
    X
    கைது செய்யப்பட்ட 3 பேர் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட சாராய மூட்டைகள், மோட்டார் சைக்கிள்களை படத்தில் காணலாம்.

    மோட்டார் சைக்கிள்களில் கடத்தப்பட்ட 400 சாராய பாக்கெட்டுகள் பறிமுதல் - 3 பேர் கைது

    திட்டச்சேரி அருகே மோட்டார் சைக்கிள்களில் கடத்தப்பட்ட 400 சாராய பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர்.
    திட்டச்சேரி:

    புதுச்சேரி மாநிலத்திலிருந்து நாகை வழியாக தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு சாராயம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா உத்தரவின்பேரில் போலீசார் நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டனர். இதைப்போல குத்தாலத்தில் திட்டச்சேரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக 2 மோட்டார்சைக்கிள்கள் வந்தன. அந்த மோட்டார் சைக்கிள்களை சந்தேகத்தின் பேரில் போலீசார் மறித்து சோதனை நடத்தினர்.

    சோதனையில் மோட்டார் சைக்கிள்களில் 3 மூட்டைகளில் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 400 சாராயம் பாக்கெட்கள் இருந்தன. உடனே போலீசார் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் மோட்டார் சைக்கிள்களில் வந்த கீழ்வேளூர் ஒன்றியம் கடம்பரவாழ்க்கை மேலத்தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் பாபு (வயது22), அதே பகுதியை சேர்ந்த ஜெயராமன் மகன் ஹரிகரன் (21), பெருங்கடம்பனூர் புதுத்தெருவை சேர்ந்த ராஜா மகன் ஜெயபிரகாஷ்(22) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கீழ்வேளுர் பகுதிக்கு புதுச்சேரி மாநிலத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் சாராயத்தை கடத்தி வந்தது தெரியவந்தது.
    Next Story
    ×