என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாகூரில் 200 கிலோ பாலிதீன் பைகள் பறிமுதல் - தனியார் நிறுவனத்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
Byமாலை மலர்5 Feb 2021 1:55 PM GMT (Updated: 5 Feb 2021 1:55 PM GMT)
நாகூரில் 200 கிலோ பாலிதீன் பைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் தனியார் நிறுவனத்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
நாகூர்:
நாகை நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பாலிதீன் பைகள் தயாரிக்கப்படுகிறதா? என ஆணையர் ஏகராஜ் தலைமையில், உதவி ஆய்வாளர்கள் அரசகுமார், சுந்தர்ராஜ் உள்பட நகராட்சி அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நாகூர் வடக்கு பால்பண்ணைச்சேரி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள் உற்பத்தி செய்வது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அங்கிருந்த 200 கிலோ தடைசெய்யப்பட்ட பாலிதீன் பைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தடையை மீறி பாலிதீன் பைகளை தயாரித்த அந்த நிறுவனத்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. நாகை நகர் பகுதியில் இயங்கி வரும் கடைகள், ஓட்டல்கள் மற்றும் விடுதிகளில் தடைசெய்யப்பட்ட பாலிதீன் பைகளை பயன்படுத்தக் கூடாது. இதை மீறி பயன்படுத்தினால் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 கீழ் அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நகராட்சி ஆணையர் ஏகராஜ் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X