என் மலர்
செய்திகள்

தற்கொலை
அன்னவாசல் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை?
அன்னவாசல் அருகே வேப்பமரத்தில் வாலிபர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்னவாசல்:
அன்னவாசல் அருகே உள்ள விளாப்பட்டியை சேர்ந்தவர் சின்னத்துரை. இவரது மகன் ஆனந்த் (வயது 22). வீட்டில் இருந்த ஆனந்த் நேற்று முன்தினம் இரவு வெளியில் சென்றுவிட்டுவருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர் நேற்று காலை வரை வீட்டிற்கு வரவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை சின்னத்துரையின் உறவினர் நந்தக்குமார் என்பவர் சின்னத்துரையிடம் வந்து உங்கள் மகன் ஆனந்த் பண்ணைகுட்டையில் உள்ள வேப்பமரத்தில் தூக்கில் தொங்குவதாக தெரிவித்துள்ளார்.
பின்னர் அங்கு சென்று பார்த்தபோது ஆனந்த் இறந்த நிலையில் தூக்கில் தொங்கியுள்ளார். இதனையடுத்து அன்னவாசல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த அன்னவாசல் போலீசார் ஆனந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அன்னவாசல் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ஆனந்த் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? யாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டு சென்றனரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






