என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுச்சேரிக்கு நாராயணசாமி செய்தது இதுதான்... பாஜக பொதுக்கூட்டத்தில் ஜே.பி.நட்டா பேச்சு
Byமாலை மலர்31 Jan 2021 8:15 AM GMT (Updated: 31 Jan 2021 8:15 AM GMT)
புதுச்சேரி ஊழல் இல்லாத மாநிலமாக மாறும் என்றும் தாமரை மலரும் என்றும் பாஜக பொதுக்கூட்டத்தில் ஜே.பி.நட்டா பேசினார்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசியதாவது:-
கடந்த 35 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில், 52 சதவீத மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்கின்றனர். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, பதுச்சேரிக்கு 70 சதவீத மானிய உதவி வழங்கப்பட்டது. தற்போது முதல்வராக இருக்கும் நாராயணசாமி மத்திய மந்திரியாக இருந்தபோது, அந்த மானிய உதவியானது 30 சதவீதமாக குறைந்தது.
நாராயணசாமி மத்திய மந்திரியாக இருந்தபோது, ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு 5000 கோடி ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்தார். ஆனால், புதுச்சேரிக்கு அவர் எந்த கடனையும் தள்ளுபடி செய்யவில்லை. இந்த மாதிரியான நீதியைத் தான் அவர் புதுவைக்கு வழங்கியிருக்கிறார். இப்போது முதல்வராக இருக்கிறார்.
இங்கே கூடியிருக்கிற உங்களின் உற்சாகத்தைப் பார்க்கும்போது, 23க்கும் அதிகமான தொகுதிகளில் நாம் வெற்றி பெறுவதற்கான தெளிவான அறிகுறி தென்படுகிறது. புதுச்சேரியில் வளர்ச்சியை காண்பீர்கள். புதுச்சேரி ஊழல் இல்லாத மாநிலமாக இருக்கும். புதுச்சேரி மாறும், தாமரை மலரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X