என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீமான்
    X
    சீமான்

    இட ஒதுக்கீட்டு கொள்கையில் ராமதாசுடன் துணை நிற்பேன்- சீமான் தகவல்

    இட ஒதுக்கீட்டு கொள்கையில் ராமதாஸ் உடன் துணை நிற்பேன் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

    வேலூர், ஜன.31-

    ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் உள்ள 13 சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிட உள்ள நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நேற்று நடந்தது. இதில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார்.

    பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை என்பது 25 ஆண்டுகால போராட்டத்துக்கு பிறகு தற்போது ஆளுநர் கையெழுத்திடவுள்ளார். எப்படியும் போராடி விடுதலையை சாத்தியப் படுத்துவோம்.

    தேர்தல் லாபத்துக்காக என்றாலும் 7 பேரை தயவு செய்து விடுதலை செய்யுங்கள். இந்த முறை வெற்று அறிவிப்பாக இல்லாமல் ஆக்கப்பூர்வமான செயலாக்கத்துக்கு கொண்டு வர வேண்டும்.

    இட ஒதுக்கீட்டு கொள்கையில் ராமதாஸ் உடன் துணை நிற்பேன். இட ஒதுக்கீட்டில் அவர் எப்போதுமே உறுதியாக இருப்பார். மக்களுக்கு பிரச்சினையே அ.தி.மு.க., தி.மு.க. என்ற 2 கட்சிகள் தான். இத்தனை ஆண்டுகளாக மக்கள் பிரச்சினையை தீர்க்க முடியாதவர்கள் 100 நாட்களில் தீர்க்கப் போகிறார்கள்.

    பா.ஜ.க. ஆட்சியின் சாதனைகளை பற்றி பேச ஒன்றும் இல்லை. அவர்கள், கொண்டு வந்த திட்டங்கள் எல்லாமே கொடுந்திட்டங்கள். வட இந்தியாவில் ராமர், கேரளாவில் அய்யப்பன், தமிழகத்தில் முருகன், பாஜகவும், ஸ்டாலினும் வேல் எடுத்தது தேர்தலுக்காக மக்களை இழுக்கத்தான்’’ என்றார். * * * நிகழ்ச்சியில் சீமான் பேசிய காட்சி. * * * வேலூர் - 02

    Next Story
    ×