search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழந்தை திருமணம்
    X
    குழந்தை திருமணம்

    திருவண்ணாமலையில் ஒரே நாளில் 14 குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்

    திருவண்ணாமலையில் ஒரே நாளில் திருமண வயது நிரம்பாமல் திருமணத்துக்கு ஏற்பாடு செய்த 14 குழந்தை திருமணங்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தின் செங்கம், திருவண்ணாமலை, தண்டராம்பட்டு, சேத்துப்பட்டு, கலசப்பாக்கம், துரிஞ்சாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் முகூர்த்த நாளான நேற்று குழந்தை திருமணங்கள் நடைபெற உள்ளதாக ‘சைல்டு லைன்’ எண்ணிற்கு புகார்கள் வந்தன.

    இதையடுத்து ‘சைல்டு லைன்’, சமூகநலத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அதில் திருமண வயது நிரம்பாமல் திருமணத்துக்கு ஏற்பாடு செய்த 14 குழந்தை திருமணங்களை அவர்கள் தடுத்து நிறுத்தினர். மணப்பெண்ணாக இருந்த 5 சிறுமிகள் மீட்கப்பட்டு திருவண்ணாமலையில் உள்ள குழந்தைகள் நல குழுமத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
    Next Story
    ×