என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    செங்கல்பட்டு அருகே அரசு ஊழியர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

    செங்கல்பட்டு அருகே அரசு ஊழியர் வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அருகே சாந்திநகர் விரிவு பகுதிக்கு உட்பட்ட அனந்தகமல நகரில் குடும்பத்துடன் வசித்து வருபவர் மோகன் வயது (60). ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவர் தனது குடும்பத்துடன் நேற்று முன்தினம் அச்சரப்பாக்கத்தில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு நேற்று வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த மோகன் உள்ளே சென்று பார்த்தார்.

    அப்போது வீட்டின் பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகை, ரூ.40 ஆயிரம் மற்றும் வெள்ளிப்பொருட்கள் கொள்ளை போனது தெரியவந்தது. இது குறித்து அவர் செங்கல்பட்டு தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×