search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    தேன்கனிக்கோட்டை அருகே லாரி மோதி விவசாயி பலி

    தேன்கனிக்கோட்டை அருகே லாரி மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயக்கோட்டை:

    தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கோவிந்தப்பள்ளியை சேர்ந்தவர் அர்ச்சுனன் (வயது 30). விவசாயி. இவர் நேற்று முன்தினம் மொபட்டில் சென்ற போது ராயக்கோட்டையில் இருந்து பூ ஏற்றி வந்த லாரி மோதியது. இந்த விபத்தில் அர்ச்சுனன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுதொடர்பாக அவருடைய மனைவி நந்தினி ராயக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலேசன் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×