என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வந்தவாசி அருகே பைக் விபத்தில் மாமியார்- மருமகள் பலி
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த சாத்தனூரை சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி சின்ன குழந்தை (76) முத்துவின் தம்பி மகன் பன்னீர்செல்வம், இவரது மனைவி பச்சையம்மாள் (45), சின்ன குழந்தைக்கும் பச்சையம்மாளுக்கும் உடல் நிலை சரியில்லை. இருவரையும் சின்ன குழந்தையின் மகன் சங்கர் (40) பைக்கில் வந்தவாசி தனியார் மருத்துவமனைக்கு நேற்று இரவு அழைத்து வந்தார்.
சிகிச்சைக்கு பின்னர் சின்னகுழந்தையையும், பச்சையம்மாளையும் பைக்கில் ஏற்றிக்கொண்டு சங்கர் சாத்தனூர் நோக்கி சென்றார்.
வந்தவாசி விளாங்காடு நெடுஞ்சாலை சளுக்கை கூட்டு சாலை அருகே பைக் சென்றபோது பின்னால் அதிவேகமாக வந்த கீழ்ப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விறகு வெட்டும் தொழிலாளி பாக்யராஜ் (24) ஓட்டி வந்த பைக் சங்கர் பைக் மீது மோதியது இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
படுகாயமடைந்த 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சின்ன குழந்தை பரிதாபமாக இறந்தார். மேல் சிகிச்சைக்காக பச்சையம்மாள், சங்கர் இருவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பச்சையம்மாள் நள்ளிரவு பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக வந்தவாசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்