என் மலர்
செய்திகள்

கரூரில் பிரசாரம் செய்த ராகுல் காந்தி
இந்திய விவசாயத்தை அழிக்கவே 3 சட்டங்கள்... கரூர் பிரசாரத்தில் ராகுல் காந்தி தாக்கு
இந்திய விவசாயத்தை அழிப்பதற்காக 3 வேளாண் சட்டங்களை பிரதமர் கொண்டு வந்திருப்பதாக ராகுல் காந்தி பேசினார்.
கரூர்:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பிரசாரம் செய்த அவர், இன்று கரூர் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.
பிரசாரத்தின்போது ராகுல் காந்தி பேசியதாவது:-
நமது விவசாயிகள் மீது பிரதமர் தாக்குதல் நடத்துகிறார். இந்திய விவசாயத்தை அழிப்பதற்காக 3 வேளாண் சட்டங்களை அவர் கொண்டு வந்திருக்கிறார். விவசாயத்தை 3 பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பிரதமர் கொடுத்துவிட்டார்.
இளைஞர்களுக்கு வேலை கிடைக்காததற்கு அவர்கள் காரணம் அல்ல, மோடிதான் காரணம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கரூர் மாவட்டத்தில் பிரசாரம் செய்ய வந்த ராகுல் காந்திக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Next Story