என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குன்னூர் நகராட்சியை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்23 Jan 2021 1:47 PM GMT (Updated: 23 Jan 2021 1:47 PM GMT)
குன்னூர் நகராட்சியை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குன்னூர்:
குன்னூர் நகரின் முக்கிய பகுதியான மவுண்ட் ரோட்டில் நடைபாதையை ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. எனவே ஆக்கிரமிப்பை அகற்ற கோரியும், அங்கு கடை வைக்க அனுமதி கொடுத்த நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து குன்னூர் நகர பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் வி.பி. தெருவில் நடந்தது.
நகர தலைவர் குங்கும்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட பொது செயலாளர் ஈஸ்வரன், மாவட்ட மகளிர் அணி பொதுசெயலாளர் கலைவாணி, மாவட்ட துணைத் தலைவர் பாப்பண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் குடிநீர், நடைபாதை வசதி செய்து கொடுக்க வேண்டும், வனவிலங்குகள் குடியிருப்புக்குள் நுழைவதை தடுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினார்கள். இதில் மாவட்ட இளைஞர் அணி தலைவர் ரகுநந்தன், நகர பொதுசெயலாளர்கள் சரவணன், பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X