search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    சரக்கு வேனில் மணல் கடத்தியவர் கைது

    சரக்கு வேனில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரையூர்:

    மேலத்தானியம்-அம்மாபட்டி சாலையில் காரையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்வாசகன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த சரக்கு வேனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சரக்கு வேனில் மணல் கடத்தி வந்த கவினாரிப்பட்டியைச் சேர்ந்த மூர்த்தி என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×