search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    சூரிய மின் விளக்கு பேட்டரியை திருடிய 5 பேர் கைது

    சூரிய மின் விளக்கு பேட்டரியை திருடிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரிமளம்:

    அரிமளம் ஊராட்சி ஒன்றியம், ஏம்பல் ஊராட்சியில் சூரிய மின் விளக்குகள் பயன்படுத்தப்படும் பேட்டரியை திருடி கொண்டிருந்த நபர்களை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பிடித்து அரிமளம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில், சூரிய மின் விளக்கு பயன்படுத்தும் பேட்டரிகளை மணமேல்குடி மற்றும் நாகுடி பகுதியை சேர்ந்த கவியரசன், முத்துக்குமார், கார்த்திக், சபரிவாசன், அய்யனார் ஆகியோர் திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து கே.புதுப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரையரசன் 5 பேர் மீது வழக்குப்பதிந்து, அவர்களை கைது செய்தார்.
    Next Story
    ×