என் மலர்
செய்திகள்

விபத்து பலி
போச்சம்பள்ளி அருகே சாலை விபத்தில் தொழிலாளி பலி
போச்சம்பள்ளி அருகே சாலை விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
போச்சம்பள்ளி தாலுகா கொல்லப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 49). கூலித்தொழிலாளி. இவர் தனது மொபட்டில் அவதானப்பட்டி சிறுவர் பூங்கா அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி, மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மாரியப்பன் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து கிருஷ்ணகிரி டேம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாஜூதீன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






