என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிறுமி கடத்தல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் போக்சோ சட்டத்தில் கைது
Byமாலை மலர்22 Jan 2021 9:00 AM GMT (Updated: 22 Jan 2021 9:00 AM GMT)
சிறுமியை கடத்தியதாக, ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமயம்:
திருமயம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி மாயமானார். இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், பனையப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் அதே ஊரை சேர்ந்த பழனிவேல் மகன் அடைக்கலம் (வயது 26) என்பவர் சிறுமியை திருப்பூருக்கு கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு சென்று இருவரையும் திருமயம் அழைத்து வந்தனர். இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலக்கண்ணன் மேல் விசாரணை நடத்தினார்.
அப்போது சிறுமியை கடத்திச் செல்ல அடைக்கலத்தின் அண்ணன் லட்சுமணன் (39), தங்கை பழனியாயி (23) ஆகியோர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக அந்த சிறுமியிடமும் வாக்குமூலம் பெறப்பட்டது. பின்னர், சிறுமியை கடத்தியதாக அடைக்கலம், லட்சுமணன், பழனியாயி ஆகிய 3 பேர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X