என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாலையில் தேங்கி நிற்கும் பாதாள சாக்கடை கழிவுநீர்- தொற்று நோய் பரவும் அபாயம்
Byமாலை மலர்21 Jan 2021 10:23 AM GMT (Updated: 21 Jan 2021 10:23 AM GMT)
நாகூர் பெருமாள் தெற்கு வீதியில் சாலையில் தேங்கி நிற்கும் பாதாள சாக்கடை கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.
நாகூர்:
நாகையை அடுத்த நாகூரில் பெருமாள் தெற்கு வீதி உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த தெரு வழியாக எம்.ஜி.ஆர். நகர், தும்பபூ மடத்தெரு, பெருமாள் வடக்கு வீதி, மாப்பிள்ளை தெரு, புதிய பஸ் நிலையம் ஆகிய தெருக்களுக்கு செல்லும் முக்கிய சாலையாக உள்ளது.
இந்த நிலையில் பெருமாள் தெற்கு வீதியில் பாதாள சாக்கடையில் இருந்து கழிவு நீர் வெளியேறி சாலையில் தேங்கி நிற்கிறது. கடந்த 10 நாட்களாக பாதாள சாக்கடை கழிவு நீர் சாலையில் தேங்கி நிற்கிறது. மேலும் கழிவுநீரும், மழைநீரும் கலந்து தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் வீசிவருகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மூக்கை பிடித்து கொண்டு செல்கின்றனர்.
கழிவுநீரில் கொசுகள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல், சிக்குன்குனியா உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த பகுதியில் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பெருமாள் தெற்கு வீதியில் சாலையில் தேங்கி கிடக்கும் பாதாள சாக்கடை கழிவு நீரை அகற்ற வேண்டும். மேலும் மீண்டும் சாலையில் கழிவு நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் எதி்ர்பார்த்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X