search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜேபி நட்டா
    X
    ஜேபி நட்டா

    பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா 29-ந்தேதி புதுவை வருகிறார்

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பா.ஜனதாவின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வருகிற 29-ந்தேதி மாலை புதுவை வருகிறார்.
    புதுச்சேரி:

    தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநில தேர்தலுடன் புதுவை சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

    புதுவையில் முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை அகற்றி கூட்டணி ஆட்சியை உருவாக்க பா.ஜனதா பல்வேறு வியூகம் அமைத்து செயல்பட்டு வருகிறது.

    சட்டமன்ற தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த நிர்மல்குமார் சுரானா புதுவை மாநில பா.ஜனதா பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதுவையின் 30 தொகுதிக்கும் கர்நாடக மாநில பிரதிநிதிகள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    கடந்த ஓராண்டாகவே சட்டமன்ற தேர்தலுக்கு பா.ஜனதா தயாராகி வருகிறது. காங்கிரஸ் அரசை கண்டித்து பல்வேறு வகையிலான போராட்டங்களை பா.ஜனதா நடத்தி வருகிறது.

    அதோடு பிற கட்சிகளில் செல்வாக்குள்ள வேட்பாளர் கர்நாடக மாநில பிரதிநிதிகளை தங்கள் கட்சியின் பக்கம் இழுப்பதிலும் பா.ஜனதாவினர் ஈடுபட்டுள்ளனர். புதுவையின் பிரதான எதிர்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    காங்கிரசில் உள்ள அதிருப்தி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களை தங்கள் கட்சிக்கு இழுக்க பா.ஜனதா வியூகம் அமைத்துள்ளது. ஒரு அமைச்சர், 5 எம்.எல்.ஏ.க்கள், காங்கிரசின் 10-க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்கள் பா.ஜனதாவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

    இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பா.ஜனதாவின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வருகிற 29-ந்தேதி மாலை புதுவை வருகிறார்.

    அன்று இரவு புதுவை மாநில பா.ஜனதா நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

    மறுநாள் (30-ந்தேதி) புதுவை கடலூர் சாலையில் உள்ள ரோடியர் மில் திடலில் பா.ஜனதாவின் பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் ஜே.பி.நட்டா சிறப்புரை ஆற்றுகிறார். இதில் காங்கிரசை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் பா.ஜனதாவில் இணைய உள்ளனர்.

    30-ந்தேதி மதுரை வருகிறார். அங்கு 2 நாட்கள் முகாமிடுகிறார். தென் மாவட்ட நிர்வாகிகளுடன் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார்.
    Next Story
    ×