search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கொரோனாவில் இருந்து மீண்ட அரசு பள்ளி ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை

    கொரோனாவில் இருந்து மீண்ட அரசு பள்ளி ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    வேலூர்:

    வேலூர் பிஷப்டேவிட் நகரை சேர்ந்தவர் பிரவீன் அந்தோணி (வயது 39). இவர் செதுவாலை அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று அதில் இருந்து மீண்டார். எனினும் அவர் மன உளைச்சலிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    சமீப நாட்களாக பள்ளிக்கும் சென்று வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் மாடி அறைக்கு சென்று டி.வி. பார்த்துள்ளார். இரவு மாடியிலேயே படுத்து தூங்கி உள்ளார்.

    இந்த நிலையில் நேற்று காலையில் அவரது மனைவி ஆரோக்கியசித்ரா, மாடியில் சத்தம்கேட்டதால் அங்கு சென்று பார்த்தார். அப்போது அறையில் பிரவீன் அந்தோணி தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் பிரவீன் அந்தோணி இறந்து விட்டது தெரிந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் தெற்கு போலீசார், அவரது உடலை கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து ஆரோக்கியசித்ரா வேலூர் தெற்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீசார் கூறுகையில், பிரவீன் அந்தோணி கொரோனா தாக்கியதில் இருந்து மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார். அதன்காரணமாக வீட்டில் இருந்த ஊஞ்சலை கழற்றி வைத்து விட்டு இரும்பு சங்கிலியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.
    Next Story
    ×