என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுராந்தகம் அருகேமோட்டார் சைக்கிள் விபத்தில் கணவன்- மனைவி பலி
Byமாலை மலர்20 Jan 2021 12:41 PM GMT (Updated: 20 Jan 2021 12:41 PM GMT)
மதுராந்தகம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கணவன்- மனைவி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுராந்தகம்:
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் அடுத்த பேரமனூரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 43). கொத்தனார் வேலை செய்து வந்தார். இவரது மனைவி ஆதிலட்சுமி (40).
சீனிவாசன் மதுராந்தகத்தை அடுத்த மொறப்பக்கத்தில் உள்ள தன்னுடைய தங்கை வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். நிகழ்ச்சியி்ல் பங்கேற்று விட்டு இருவரும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பினர்.
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை மதுராந்தகத்தை அடுத்த மாமண்டூர் என்ற இடத்தில் வரும்போது அடையாளம் தெரியாத வாகனம் இவர்களுடைய மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கணவன், மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
இது குறித்து தகவல் அறிந்த படாளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் டெல்லிபாபு ஆகியோர் விரைந்து சென்று அவர்களது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்தில் பலியான சீனிவாசன், ஆதிலட்சுமி தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X