என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காயத்துடன் சுற்றித்திரிந்த காட்டு யானை உயிரிழப்பு
Byமாலை மலர்20 Jan 2021 1:53 AM GMT (Updated: 20 Jan 2021 1:53 AM GMT)
நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் காயத்துடன் சுற்றித்திரிந்த காட்டு யானை உயிரிழந்தது.
கூடலூர்:
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தின் (வெளிமண்டலம்) மசினகுடி பகுதியில் கடந்த சில மாதங்களாக காயத்துடன் 40 வயதான ஆண் காட்டு யானை சுற்றி வந்தது. இந்த யானையை பிடித்து வனத்துறையினர் சிகிச்சை அளித்தனர். பின்னர் அந்த யானையை வனப்பகுதியில் விட்டனர்.
இந்த நிலையில் மீண்டும் அந்த யானையின் காதில் காயம் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த யானையை 4 கும்கி யானைகள் உதவியுடன் பிடிக்க நேற்று காலை முயன்றனர்.
அப்போது மருத்துவ குழுவினர் காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர். உடனே அந்த யானையை கும்கி யானைகள் உதவியுடன் லாரியில் ஏற்றி முதுமலைக்கு கொண்டு சென்றனர். ஆனால் தெப்பக்காடு முகாம் அருகே வந்தபோது லாரியில் நின்றிருந்தவாறு காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்தது. இதனால் வன அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மிகுந்த சோகம் அடைந்தனர்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தின் (வெளிமண்டலம்) மசினகுடி பகுதியில் கடந்த சில மாதங்களாக காயத்துடன் 40 வயதான ஆண் காட்டு யானை சுற்றி வந்தது. இந்த யானையை பிடித்து வனத்துறையினர் சிகிச்சை அளித்தனர். பின்னர் அந்த யானையை வனப்பகுதியில் விட்டனர்.
இந்த நிலையில் மீண்டும் அந்த யானையின் காதில் காயம் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த யானையை 4 கும்கி யானைகள் உதவியுடன் பிடிக்க நேற்று காலை முயன்றனர்.
அப்போது மருத்துவ குழுவினர் காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர். உடனே அந்த யானையை கும்கி யானைகள் உதவியுடன் லாரியில் ஏற்றி முதுமலைக்கு கொண்டு சென்றனர். ஆனால் தெப்பக்காடு முகாம் அருகே வந்தபோது லாரியில் நின்றிருந்தவாறு காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்தது. இதனால் வன அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மிகுந்த சோகம் அடைந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X