என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈரோட்டில் ரெயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை - பெற்றோர் எதிர்ப்பால் விபரீத முடிவு
Byமாலை மலர்19 Jan 2021 2:54 PM GMT (Updated: 19 Jan 2021 2:54 PM GMT)
ஈரோடு அருகே ரெயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு ரெயில் நிலையத்துக்கும், தொட்டிபாளையம் ரெயில் நிலையத்துக்கும் இடைப்பட்ட தண்டவாள பகுதியில் வாலிபர் மற்றும் இளம்பெண் ரெயில் மோதி உடல் சிதறி இறந்து கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணையில் இறந்தவர்கள், ஈரோடு மாவட்டம் கொடுமுடி இச்சிப்பாளையத்தை சேர்ந்த சண்முகம் என்பவருடைய மகன் யுவராஜ் (வயது 29) , இச்சிபாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சதாசிவம் என்பவருடைய மகள் பூர்ணிமா (26) ஆகியோர் என்பதும், இருவரும் காதல் ஜோடி என்பதும் தெரிய வந்தது.
யுவராஜ் தனியார் நிதி நிறுவனத்திலும், பூர்ணிமா ஈரோடு மின்வாரிய அலுவலகத்தில் தொழில்நுட்ப பிரிவில் ஊழியராகவும் பணியாற்றி வந்துள்ளனர். இவர்கள் 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். இவர்கள் 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் வாழ்க்கையில் ஒன்றுசேர முடியாத காதல் ஜோடி மரணத்தில் ஒன்றுசேர முடிவு செய்தனர். அதன்படி நேற்று காலை பூர்ணிமா வீட்டை விட்டு வெளியேறி காதலன் யுவராஜை சந்தித்துள்ளார். பின்னர் 2 பேரும் ஸ்கூட்டரில் தொட்டிபாளையம் ரெயில்வே தண்டவாள பகுதிக்கு வந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் முன் பாய்ந்து காதல் ஜோடியினர் தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X