என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாகை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி 2 நாட்களில் ரூ.9 கோடிக்கு மது விற்பனை
Byமாலை மலர்16 Jan 2021 11:38 AM GMT (Updated: 16 Jan 2021 11:38 AM GMT)
நாகை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி 2 நாட்களில் ரூ.9 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் 102 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. புத்தாண்டு, பொங்கல், தீபாவளி, ஆங்கில புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் மது விற்பனை அதிகரிப்பது வழக்கம். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை, மாட்டு பொங்கல் பண்டிகைகள் என்றும் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம்.
மாட்டு பொங்கல், திருவள்ளுவர் தினம் ஆகிய 2 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படும் என அறிவிக்கப்பட்டதால் மதுபியர்கள் முன் எச்சரிக்கையாக பொங்கல் பண்டிகை அன்றே மதுபாட்டில்களை வாங்கி குவித்து வைத்து விட்டனர்.
இதன் காரணமாக டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. இதனால் விற்பனையும் அதிகரித்தது. போகி பண்டிகை மற்றும் பொங்கல் பண்டிகை ஆகிய 2 நாட்களில் ரூ.9 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X