என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா விதிமுறைகளை மீறும் விடுதிகளுக்கு சீல்- கலெக்டர் எச்சரிக்கை
Byமாலை மலர்16 Jan 2021 5:15 AM GMT (Updated: 16 Jan 2021 5:15 AM GMT)
கொரோனா விதிமுறைகளை மீறும் விடுதிகளுக்கு 'சீல்' வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
ஊட்டி:
பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. அவர்கள் தங்கும் விடுதிகள், காட்டேஜ்களில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். மீறினால் விடுதிகளுக்கு 'சீல்' வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ஊட்டிக்கு பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளது. அவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும். கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவது குறித்து தங்கும் விடுதிகள், காட்டேஜ்கள், ஓட்டல்கள், உணவக உரிமையாளர்களுக்கு கூட்டம் நடத்தி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அங்கு பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். கடைபிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் விதிமுறைகளை மீறும் சம்பந்தப்பட்ட தங்கும் விடுதிகள், காட்டேஜ்களுக்கு 'சீல்' வைக்கப்படும். உணவகங்களில் உணவு சாப்பிட்டு விட்டு வெளியே வரும் போது கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.
பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. அவர்கள் தங்கும் விடுதிகள், காட்டேஜ்களில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். மீறினால் விடுதிகளுக்கு 'சீல்' வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ஊட்டிக்கு பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளது. அவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும். கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவது குறித்து தங்கும் விடுதிகள், காட்டேஜ்கள், ஓட்டல்கள், உணவக உரிமையாளர்களுக்கு கூட்டம் நடத்தி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அங்கு பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். கடைபிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் விதிமுறைகளை மீறும் சம்பந்தப்பட்ட தங்கும் விடுதிகள், காட்டேஜ்களுக்கு 'சீல்' வைக்கப்படும். உணவகங்களில் உணவு சாப்பிட்டு விட்டு வெளியே வரும் போது கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X