search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    காஞ்சிபுரம் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை

    காஞ்சிபுரம் அருகே வயிற்று வலி காரணமாக பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை அடுத்த செவிலிமேடு பாலாஜிநகர், அய்யங்கார் தெருவை சேர்ந்தவர் சாமி பகவதி. இவரது மனைவி நதியா (34). இவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்று 2 குழந்தைகள் உள்ளனர்.

    நதியா நீண்ட நாட்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. வயிற்று வலி அதிகமானதால் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் காஞ்சிபுரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×