search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    தூசி அருகே மோட்டார் சைக்கிள் மோதி கட்டிட தொழிலாளி பலி

    தூசி அருகே மோட்டார் சைக்கிள் மோதி கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தூசி:

    தூசி அருகே உள்ள சித்தாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் குமார். அவரது மகன் அண்ணாதுரை (வயது 23), கட்டிட தொழிலாளி. இவர், மோட்டார் சைக்கிளில் சித்தாத்தூர் தண்ணீர் டேங்க் பகுதியில் வந்தபோது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் திடீரென அண்ணாதுரை ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அண்ணாதுரையின் மனைவி பிரியதர்ஷினி தூசி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ் ஜெயக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×