search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    விஷம் குடித்த ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவி உயிரிழப்பு

    நாகூர் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    நாகூர்:

    நாகூரை அடுத்த நரிமணம் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகள் சத்யா (வயது 21). இவர் ஆசிரியர் பயிற்சி பள்ளியி்ல் படித்து வந்தார். இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். 

    இந்த நிலையில் சம்பவத்தன்று வயிற்று வலி அதிகமானதால் சத்யா வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை(விஷம்) எடுத்து குடித்துள்ளார். உடனே குடும்பத்தினர் அவரை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சத்யா பரிதாபமாக உயிரிழந்தார். 

    இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×