search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    சூளகிரி அருகே வேன் டிரைவர் விபத்தில் பலி

    சூளகிரி அருகே வேன் டிரைவர் விபத்தில் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள மாதர்சனப்பள்ளியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 22), வேன் டிரைவர். சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் மாதர்சனப்பள்ளி-சூளகிரி சாலையில் பீரேபாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் அந்த பகுதியில் உள்ள மின் கம்பத்தில் மோதியது. இதில் விக்னேஷ் பலத்தகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் விக்னேஷ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×