என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கூடலூர் பகுதியில் பரவலாக மழை- சாலையோர நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
Byமாலை மலர்11 Jan 2021 4:17 AM GMT (Updated: 11 Jan 2021 4:17 AM GMT)
கூடலூர் பகுதியில் பரவலாக பெய்த மழை காரணமாக சாலையோர நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.
கூடலூர்:
கூடலூர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. அத்துடுன் கூடலூர்- ஊட்டி சாலையில் புதிய நீர்வீழ்ச்சிகள் தோன்றின. ஆனால் வடகிழக்கு பருவமழை கூடலூரில் போதிய அளவு பெய்யாததால், ஆறுகளில் தண்ணீர் வரத்து நின்றது. அத்துடன் புதிய நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டன.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கூடலூர் பகுதியில் மாலை அல்லது இரவில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதியில் பசுமை திரும்பி உள்ளது. அத்துடன் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
இதேபோல் சாலையோரம் பல இடங்களில் உள்ள நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து காணப்படுகிறது. கூடலூர் - ஊட்டி சாலையில் உள்ள 27- வது மைல், தவளமலை உள்ளிட்ட சில இடங்களிலும், கூடலூரில் இருந்து ஓவேலி செல்லும் சாலையில் கரையோரம் பல இடங்களிலும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
இதை சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி பொதுமக்களும் அதிக அளவு நின்று ரசித்து செல்கின்றனர். அத்துடன் அவர்கள் அதன் அருகே நின்று செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.
இது குறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, கூடலூர் பகுதியில் தற்போது பரவலாக மழை பெய்வதால் சாலையோர நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் கொட்டுவது மனதை மிகவும் கவர்கிறது என்றனர்.
கூடலூர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. அத்துடுன் கூடலூர்- ஊட்டி சாலையில் புதிய நீர்வீழ்ச்சிகள் தோன்றின. ஆனால் வடகிழக்கு பருவமழை கூடலூரில் போதிய அளவு பெய்யாததால், ஆறுகளில் தண்ணீர் வரத்து நின்றது. அத்துடன் புதிய நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டன.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கூடலூர் பகுதியில் மாலை அல்லது இரவில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதியில் பசுமை திரும்பி உள்ளது. அத்துடன் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
இதேபோல் சாலையோரம் பல இடங்களில் உள்ள நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து காணப்படுகிறது. கூடலூர் - ஊட்டி சாலையில் உள்ள 27- வது மைல், தவளமலை உள்ளிட்ட சில இடங்களிலும், கூடலூரில் இருந்து ஓவேலி செல்லும் சாலையில் கரையோரம் பல இடங்களிலும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
இதை சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி பொதுமக்களும் அதிக அளவு நின்று ரசித்து செல்கின்றனர். அத்துடன் அவர்கள் அதன் அருகே நின்று செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.
இது குறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, கூடலூர் பகுதியில் தற்போது பரவலாக மழை பெய்வதால் சாலையோர நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் கொட்டுவது மனதை மிகவும் கவர்கிறது என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X